News Tuesday, July 19, 2016 - 08:55

Select District: 
News Items: 
Description: 
Up until the year 2006, 35.883 tonnes of goods were handled. After that the ship did not come to port. Collikkollumpati ten years on a large scale, export, import has been done. In this situation, in order to revive the port and Puducherry, Puducherry, Chennai port, has decided to make the MOU. Pon on April 23 in the presence of Federal Minister of Puducherry government has treaty.
Regional Description: 
புதுச்சேரி மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் திட்டமாக, புதுச்சேரி துறைமுகம்-சென்னை துறைமுக கழகம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைய உள்ளது.புதுச்சேரி உப்பளத்தில் உள்ள புதிய துறைமுகம் 1994ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2006ம் ஆண்டும் வரை 35,883 டன் வரை சரக்குகள் கையாளப்பட்டது. அதன் பிறகு எந்த கப்பலும் துறைமுகத்திற்கு வரவில்லை. பத்து ஆண்டுகளாக சொல்லிக்கொள்ளும்படி பெரிய அளவில், ஏற்றுமதி, இறக்குமதி நடைபெறவில்லை. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக திகழ வேண்டிய துறைமுக வளாகம், வி.ஐ.பி.,க்கள் ஹெலிகாப்டரில் வந்து பேசும் பொதுக்கூட்ட இடமாகவும், சமூக விரோதிகளின் புகலிடமாகவும் மாறியதுதான் மிச்சம். இந்த சூழ்நிலையில், புதுச்சேரி துறைமுகத்திற்கு புத்துயிர் ஊட்டும் விதமாக, புதுச்சேரி அரசு, சென்னை துறைமுகத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. வரும் 23ம் தேதி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் புதுச்சேரி அரசு ஒப்பந்தம் ஏற்படுத்த உள்ளது.