News Thursday, July 6, 2023 - 09:59

Select District: 
News Items: 
Description: 
காரைக்காலில் வருகின்ற 15.07.2023 & 16.07.2023 (சனி மற்றும் ஞாயிற்றுகிழமை) தேதிகளில் "சிறப்பு இருதய சிகிச்சை மருத்துவ.முகாம்" நடத்தப்பட உள்ளது. இதில் சங்கரா ஹார்ட் பவுண்டேஷன் மற்றும் ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜ் இணைந்து இருதய சிகிச்சை மருத்துவ நிபுணர் டாக்டர்.J.S.N மூர்த்தி தலைமையிலான 10 சிறப்பு இருதய சிகிச்சை மருத்துவர்கள் இணை மருத்துவர்கள, உதவியாளர்கள் ஆகியோர் தகுந்த மருத்துவ உபகரணங்களுடன் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வருகை தர உள்ளனர். இவர்கள் இதய நோயாளிகளை கண்டறிந்து அவர்களில் அவசியமான இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நோயாளிகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய உள்ளனர்.காரைக்கால் மாவட்ட நிர்வாகமும், அரசு மருத்துவ மனையும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளன. நாளை முதல் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள இருதய நோயாளிகள், அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து அவர்களின் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.அதன் பின்னர் அந்த நோயாளிக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்த பின் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.இது சம்பந்தமாக இன்று காலை மாவட்ட ஆட்சியர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய போது இது போன்ற இருதய அறுவை சிகிச்சை முகாம்களை மிசோராம் மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த போது நடத்தி பலர் பயன் பெற்றனர் என்றும் அதுபோல காரைக்கால் மாவட்டத்தில் உள்ள இருதய நோயாளிகள் நலமடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த மருத்துவ சிகிச்சை முகாமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்கள்.
Regional Description: 
காரைக்காலில் வருகின்ற 15.07.2023 & 16.07.2023 (சனி மற்றும் ஞாயிற்றுகிழமை) தேதிகளில் "சிறப்பு இருதய சிகிச்சை மருத்துவ.முகாம்" நடத்தப்பட உள்ளது. இதில் சங்கரா ஹார்ட் பவுண்டேஷன் மற்றும் ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜ் இணைந்து இருதய சிகிச்சை மருத்துவ நிபுணர் டாக்டர்.J.S.N மூர்த்தி தலைமையிலான 10 சிறப்பு இருதய சிகிச்சை மருத்துவர்கள் இணை மருத்துவர்கள, உதவியாளர்கள் ஆகியோர் தகுந்த மருத்துவ உபகரணங்களுடன் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வருகை தர உள்ளனர். இவர்கள் இதய நோயாளிகளை கண்டறிந்து அவர்களில் அவசியமான இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நோயாளிகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய உள்ளனர்.காரைக்கால் மாவட்ட நிர்வாகமும், அரசு மருத்துவ மனையும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளன. நாளை முதல் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள இருதய நோயாளிகள், அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து அவர்களின் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.அதன் பின்னர் அந்த நோயாளிக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்த பின் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.இது சம்பந்தமாக இன்று காலை மாவட்ட ஆட்சியர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய போது இது போன்ற இருதய அறுவை சிகிச்சை முகாம்களை மிசோராம் மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த போது நடத்தி பலர் பயன் பெற்றனர் என்றும் அதுபோல காரைக்கால் மாவட்டத்தில் உள்ள இருதய நோயாளிகள் நலமடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த மருத்துவ சிகிச்சை முகாமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்கள்.