News Wednesday, November 23, 2022 - 12:03
Submitted by nagapattinam on Wed, 2022-11-23 12:03
Select District:
News Items:
Description:
ஒவ்வொரு வருடமும் 13 மில்லியன் டன் நெகிழி கடலை அடைந்து அங்குள்ள விலங்குகளின் அழிவிற்கு வழிவகுக்கிறது. இது ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு லாரி முழுவதுமான குப்பைகளை கடலில் கொட்டுவதற்கு சமமாகும். இந்த நிலை தொடர்ந்தால் 2050 ஆம் ஆண்டில், கடலில் மீன் இருக்கும் அளவைவிட நெகிழியின் அளவு அதிகமாக இருக்கும். ஒரு கணக்கெடுப்பின்படி, 2050 ஆம் ஆண்டில், 99% கடல் பறவைகள் நெகிழியை விழுங்கி இருக்கும், கடலிலுள்ள குப்பைகள் மூலம் 600 வகையான கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்பிற்குள்ளாகின்றன. கடலில் குப்பையிடுவது மூலம் நெகிழியை விழுங்கியோ அதில் மாட்டியோ 15% விலங்கினங்கள் அழிவின் விளிம்பில் இருக்கும். மேலும் கிட்டத்தட்ட 11.1 பில்லியன் நெகிழி பொருட்கள் பவளப்பாறைகளில் சிக்கி அவற்றிற்கு ஆக்சிஜன் மற்றும் ஒளி கிடைப்பதில் சிரமம் ஏற்படுத்துவதுடன் தீமைதரும் வேதிப்பொருட்களை வெளியிடும் இன்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது மிகவும் மோசமான அளவாகும். நெகிழி மாசுவை கடலில் நீக்க நாம் ஒவ்வொருவரும் நம்மாலானதைச் செய்திடவேண்டும்.
Regional Description:
ஒவ்வொரு வருடமும் 13 மில்லியன் டன் நெகிழி கடலை அடைந்து அங்குள்ள விலங்குகளின் அழிவிற்கு வழிவகுக்கிறது. இது ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு லாரி முழுவதுமான குப்பைகளை கடலில் கொட்டுவதற்கு சமமாகும். இந்த நிலை தொடர்ந்தால் 2050 ஆம் ஆண்டில், கடலில் மீன் இருக்கும் அளவைவிட நெகிழியின் அளவு அதிகமாக இருக்கும். ஒரு கணக்கெடுப்பின்படி, 2050 ஆம் ஆண்டில், 99% கடல் பறவைகள் நெகிழியை விழுங்கி இருக்கும், கடலிலுள்ள குப்பைகள் மூலம் 600 வகையான கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்பிற்குள்ளாகின்றன. கடலில் குப்பையிடுவது மூலம் நெகிழியை விழுங்கியோ அதில் மாட்டியோ 15% விலங்கினங்கள் அழிவின் விளிம்பில் இருக்கும். மேலும் கிட்டத்தட்ட 11.1 பில்லியன் நெகிழி பொருட்கள் பவளப்பாறைகளில் சிக்கி அவற்றிற்கு ஆக்சிஜன் மற்றும் ஒளி கிடைப்பதில் சிரமம் ஏற்படுத்துவதுடன் தீமைதரும் வேதிப்பொருட்களை வெளியிடும் இன்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது மிகவும் மோசமான அளவாகும். நெகிழி மாசுவை கடலில் நீக்க நாம் ஒவ்வொருவரும் நம்மாலானதைச் செய்திடவேண்டும்.