News Thursday, July 7, 2022 - 10:01

Select District: 
News Items: 
Description: 
மன்னார் வளைகுடாவின் சிறப்பம்சங்கள் : மன்னர் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா இந்தியாவின் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும் . இது 21 சிறிய தீவுகளையும் , மன்னார் வளைகுடாவில் உள்ள பவளப்பாறைகளை உள்ளடக்கிய பகுதி . தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் இருந்து 1 முதல் 10கி .மீ தூரத்தில் அமைந்துள்ள இப்பூங்கா தூத்துக்குடியில் இருந்து தனுஷ் கோடி வரையிலான கடற்பகுதியில் 160கி .மீ நீளத்திற்கு பரந்துள்ளது . இந்த மன்னார் வளைகுடா கிழக்கு கடற்கரை பகுதியில் 10,500 ச. கி .மீ பரப்பளவை கொண்டது . இந்த பகுதியில் 3600 க்கும் மேற்பட்ட நீர் வாழ் தாவர மற்றும் விலங்கு உயிரினங்கள் இருப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது . உலகில் முதல் கடல் ஆய்வுகூடம் 1850 ஆம் ஆண்டு குருசடை தீவில் நிறுவப்பட்டது . தென்கிழக்கு ஆசியாவிலேயே உலக உயிர் கோள் மையமாக அறிவிக்கப்பட்ட முதல் கடல் பகுதி மன்னார் வளைகுடா தான் . இப்பகுதியில் இந்தியாவிலேயே அதிக முத்துக்கவளம் உள்ள முத்து நகரமான தூத்துக்குடி உள்ளது .
Regional Description: 
மன்னார் வளைகுடாவின் சிறப்பம்சங்கள் : மன்னர் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா இந்தியாவின் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும் . இது 21 சிறிய தீவுகளையும் , மன்னார் வளைகுடாவில் உள்ள பவளப்பாறைகளை உள்ளடக்கிய பகுதி . தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் இருந்து 1 முதல் 10கி .மீ தூரத்தில் அமைந்துள்ள இப்பூங்கா தூத்துக்குடியில் இருந்து தனுஷ் கோடி வரையிலான கடற்பகுதியில் 160கி .மீ நீளத்திற்கு பரந்துள்ளது . இந்த மன்னார் வளைகுடா கிழக்கு கடற்கரை பகுதியில் 10,500 ச. கி .மீ பரப்பளவை கொண்டது . இந்த பகுதியில் 3600 க்கும் மேற்பட்ட நீர் வாழ் தாவர மற்றும் விலங்கு உயிரினங்கள் இருப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது . உலகில் முதல் கடல் ஆய்வுகூடம் 1850 ஆம் ஆண்டு குருசடை தீவில் நிறுவப்பட்டது . தென்கிழக்கு ஆசியாவிலேயே உலக உயிர் கோள் மையமாக அறிவிக்கப்பட்ட முதல் கடல் பகுதி மன்னார் வளைகுடா தான் . இப்பகுதியில் இந்தியாவிலேயே அதிக முத்துக்கவளம் உள்ள முத்து நகரமான தூத்துக்குடி உள்ளது .