News Wednesday, May 11, 2022 - 10:49
Submitted by pondi on Wed, 2022-05-11 10:49
Select District:
News Items:
Description:
எப்போதும் இல்லாத வகையில், வங்கக் கடலில் கோடை காலத்தில் புயல் உருவாகியுள்ளது. அந்தமான் அருகில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின், புயலாகவும் மாறியுள்ளது. இந்த புயலுக்கு அசானி என, பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அசானி புயலானது, தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி, விசாகப்பட்டினத்தில் இருந்து, 410 கி.மீ., - ஒடிசாவின் புரி நகரில் இருந்து, 590 கி.மீ., துாரத்தில் மையம் கொண்டிருந்தது. மணிக்கு 16 கி.மீ., வேகத்தில் மெதுவாக கரையை நோக்கி நெருங்கி வருகிறது.
இப்புயல் ஆந்திரா மற்றும் ஒடிசாவை ஒட்டிய கடற்பகுதியை இன்று நெருங்கும். பின், வடகிழக்கில் திரும்பி, ஒடிசா கடற்கரையை நெருங்கும். இதனால், ஆந்திராவின் சில பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்யும். இன்று மாலை முதல் ஒடிசா கடற்பகுதியில், மிக கனமழை பெய்யும். மத்திய மேற்கு கடற்பகுதியில் இன்று மணிக்கு, 120 கி.மீ., வேகம் வரை சூறாவளி காற்று வீசும்.
இன்றும், நாளையும் வங்க கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும்.வரும், 12ம் தேதி வரை மீனவர்கள் வங்க கடல் பகுதிக்குள் செல்ல வேண்டாம்.
Regional Description:
எப்போதும் இல்லாத வகையில், வங்கக் கடலில் கோடை காலத்தில் புயல் உருவாகியுள்ளது. அந்தமான் அருகில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின், புயலாகவும் மாறியுள்ளது. இந்த புயலுக்கு அசானி என, பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அசானி புயலானது, தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி, விசாகப்பட்டினத்தில் இருந்து, 410 கி.மீ., - ஒடிசாவின் புரி நகரில் இருந்து, 590 கி.மீ., துாரத்தில் மையம் கொண்டிருந்தது. மணிக்கு 16 கி.மீ., வேகத்தில் மெதுவாக கரையை நோக்கி நெருங்கி வருகிறது.
இப்புயல் ஆந்திரா மற்றும் ஒடிசாவை ஒட்டிய கடற்பகுதியை இன்று நெருங்கும். பின், வடகிழக்கில் திரும்பி, ஒடிசா கடற்கரையை நெருங்கும். இதனால், ஆந்திராவின் சில பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்யும். இன்று மாலை முதல் ஒடிசா கடற்பகுதியில், மிக கனமழை பெய்யும். மத்திய மேற்கு கடற்பகுதியில் இன்று மணிக்கு, 120 கி.மீ., வேகம் வரை சூறாவளி காற்று வீசும்.
இன்றும், நாளையும் வங்க கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும்.வரும், 12ம் தேதி வரை மீனவர்கள் வங்க கடல் பகுதிக்குள் செல்ல வேண்டாம்.