News Tuesday, April 5, 2022 - 11:17
Submitted by nagapattinam on Tue, 2022-04-05 11:17
Select District:
News Items:
Description:
உலகளவில் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து வரும் கழிவுகள் 2060 ஆம் ஆண்டில் 155-முதல் 265 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயரும். இந்த பிளாஸ்டிக் பொருட்கள் ஏரி, ஆறு, குளம் மற்றும் பல வழிகளில் கடலில் வந்து சேருகிறது. அதே சமயம் பிளாஸ்டிக் பொருள்களில் இருந்து வரும் நுண்ணிய துகள்களை கடல்வாழ் உயிரினங்களான ஆமை, கணவாய், மட்டி மற்றும் கடல்வாழ் பாலூட்டிகள் உணவு என்று எண்ணி உண்பதனால் இறக்க நேரிடுகிறது. இதன் அடிப்படையில் விஞ்ஞானிகள் செய்த ஆய்வின்படி மட்டி, கணவாய், மற்ற கடல் பாலுட்டிகளின் உணவுக்குழல்கள் மற்றும் கல்லீரல்களில் பிளாஸ்டிக்கின் நுண்ணிய துகள்கள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே நாம் இனிவரும் காலங்களில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைப்பது மட்டுமல்லாமல் அவற்றினை கடலில் வீசுவதை தவிர்த்தால் மட்டுமே கடல்வாழ் உயிரினங்களை பார்க்க முடியும் கடல்வாழ் உயிரினங்களின் நலனே மீனவர்களுக்கு பெரும் பலம்.
Regional Description:
உலகளவில் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து வரும் கழிவுகள் 2060 ஆம் ஆண்டில் 155-முதல் 265 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயரும். இந்த பிளாஸ்டிக் பொருட்கள் ஏரி, ஆறு, குளம் மற்றும் பல வழிகளில் கடலில் வந்து சேருகிறது. அதே சமயம் பிளாஸ்டிக் பொருள்களில் இருந்து வரும் நுண்ணிய துகள்களை கடல்வாழ் உயிரினங்களான ஆமை, கணவாய், மட்டி மற்றும் கடல்வாழ் பாலூட்டிகள் உணவு என்று எண்ணி உண்பதனால் இறக்க நேரிடுகிறது. இதன் அடிப்படையில் விஞ்ஞானிகள் செய்த ஆய்வின்படி மட்டி, கணவாய், மற்ற கடல் பாலுட்டிகளின் உணவுக்குழல்கள் மற்றும் கல்லீரல்களில் பிளாஸ்டிக்கின் நுண்ணிய துகள்கள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே நாம் இனிவரும் காலங்களில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைப்பது மட்டுமல்லாமல் அவற்றினை கடலில் வீசுவதை தவிர்த்தால் மட்டுமே கடல்வாழ் உயிரினங்களை பார்க்க முடியும் கடல்வாழ் உயிரினங்களின் நலனே மீனவர்களுக்கு பெரும் பலம்.