News Monday, November 29, 2021 - 12:18
Submitted by nagarcoil on Mon, 2021-11-29 12:18
Select District:
News Items:
Description:
குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடற்பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால்,தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரளா கடற்பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு இன்று செல்ல வேண்டாம்.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை உருவாக வாய்ப்புள்ளது.இது மேலும் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகரும். அதாவது, தமிழக, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட கடலோர பகுதிகளை நோக்கி நகரும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Regional Description:
குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடற்பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால்,தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரளா கடற்பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு இன்று செல்ல வேண்டாம்.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை உருவாக வாய்ப்புள்ளது.இது மேலும் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகரும். அதாவது, தமிழக, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட கடலோர பகுதிகளை நோக்கி நகரும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.