News Wednesday, November 17, 2021 - 12:10
Submitted by pondi on Wed, 2021-11-17 12:10
Select District:
News Items:
Description:
தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது மேற்கு திசையில் நகர்ந்து, நாளை ஆந்திராவின் தெற்கு பகுதி மற்றும் தமிழக வடக்கு கடலோர மாவட்டங்களை நெருங்கும். தற்போதைய நிலையில், மேலும் வலுவடையாமல், காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே தமிழக பகுதியை நெருங்கும். அதனால், சென்னை உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதிக்கும், வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதிக்கும் இடையில், மேலடுக்கு சுழற்சி உள்ளது. இதன் காரணமாக, பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மாவட்டத்திற்கு மிக கன மழை பெய்வதற்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும், 12 செ.மீ., வரையில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
Regional Description:
தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது மேற்கு திசையில் நகர்ந்து, நாளை ஆந்திராவின் தெற்கு பகுதி மற்றும் தமிழக வடக்கு கடலோர மாவட்டங்களை நெருங்கும். தற்போதைய நிலையில், மேலும் வலுவடையாமல், காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே தமிழக பகுதியை நெருங்கும். அதனால், சென்னை உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதிக்கும், வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதிக்கும் இடையில், மேலடுக்கு சுழற்சி உள்ளது. இதன் காரணமாக, பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மாவட்டத்திற்கு மிக கன மழை பெய்வதற்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும், 12 செ.மீ., வரையில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.