News Wednesday, October 20, 2021 - 12:41
Submitted by nagapattinam on Wed, 2021-10-20 12:41
Select District:
News Items:
Description:
புவி வெப்பமடைதல் மற்றும் கடல் மட்ட வெப்பநிலை உயரும் போது, கடல் மிதவை நுண்ணுயிரிகளில் (பிளாங்க்டன்) குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்வதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதில் வெப்பமான நீர் பொதுவாக அதிக பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் இருப்பினும் அதிக வெப்பநிலையில் - அதாவது, 25 டிகிரி செல்சியஸுக்கு மேல் உள்ள வெப்பநிலையில் - பைட்டோபிளாங்க்டன் மற்றும் ஜூப்ளாங்க்டன் வெப்பமயமாதலுக்கு பல மாற்றங்கள் நிகழ்கிறது. இவற்றில் பைட்டோபிளாங்க்டன் பன்முகத்தன்மை அதிகரித்து வருகிறது, அதே நேரத்தில் ஜூப்ளாங்க்டன் பன்முகத்தன்மை குறைகிறது. இது வெப்ப மண்டலத்தில் ஜூப்ளாங்க்டன் பன்முகத்தன்மையைக் குறைக்க வழிவகுக்கும். இது கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் இருப்பு மற்றும் செயல்பாட்டிற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
Regional Description:
புவி வெப்பமடைதல் மற்றும் கடல் மட்ட வெப்பநிலை உயரும் போது, கடல் மிதவை நுண்ணுயிரிகளில் (பிளாங்க்டன்) குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்வதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதில் வெப்பமான நீர் பொதுவாக அதிக பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் இருப்பினும் அதிக வெப்பநிலையில் - அதாவது, 25 டிகிரி செல்சியஸுக்கு மேல் உள்ள வெப்பநிலையில் - பைட்டோபிளாங்க்டன் மற்றும் ஜூப்ளாங்க்டன் வெப்பமயமாதலுக்கு பல மாற்றங்கள் நிகழ்கிறது. இவற்றில் பைட்டோபிளாங்க்டன் பன்முகத்தன்மை அதிகரித்து வருகிறது, அதே நேரத்தில் ஜூப்ளாங்க்டன் பன்முகத்தன்மை குறைகிறது. இது வெப்ப மண்டலத்தில் ஜூப்ளாங்க்டன் பன்முகத்தன்மையைக் குறைக்க வழிவகுக்கும். இது கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் இருப்பு மற்றும் செயல்பாட்டிற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.