News Monday, May 10, 2021 - 18:26

News Items: 
Description: 
மனித செயல்பாடுகளால் வெளியிடப்படும் கரியமில வாயுவின் காரணமாக வெப்பநிலை உயர்வதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா பொது முடக்கம் காரணமாக உலகம் முழுவதும் பசுமைக்குடில் வாயுவின் வெளியேற்றம் 7 சதவீதம் அளவிற்கு குறைந்தது. இருப்பினும் அது போதாது என்கிறார்கள் நிபுணர்கள். "பெருந்தொற்று காலத்திலும் நாம் பருவநிலை மாற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. மாறாக அதை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டுதான் இருக்கிறோம் ." இயற்கையாக வெப்பநிலை குறைக்கப்படும் நடவடிக்கைகளைக் காட்டிலும் மனிதர்களின் செயல்பாடுகள் அதி வேகமாக இருப்பதால் வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்த இயலவில்லை. அதே சமயம் தற்போது சர்வதேச வெப்பநிலை காலகட்டத்தின் சராசரி வெப்பநிலையைவிட 1.2 டிகிரி செல்ஷியஸ் உயர்ந்திருப்பது ஒரு கவலை தரும் விஷயமாகக் கருதப்படுகிறது. மேலும் உலக நாடுகள் இந்த நூற்றாண்டில் சர்வதேச வெப்பநிலை அதிகரிப்பை 1.5டிகிரி செல்ஷியஸிற்குள் கட்டுப்படுத்த உறுதியளித்துள்ளன. எனவே நாமும் இயற்கையோடு ஒன்றிணைந்து, வெப்பநிலை குறைக்கப்படும் நடவடிக்கைகளை கையாலுவோம். தட்ட வேப்பநிலை மாற்றம் தரணியில் இனி போராட்டம்...
Regional Description: 
மனித செயல்பாடுகளால் வெளியிடப்படும் கரியமில வாயுவின் காரணமாக வெப்பநிலை உயர்வதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா பொது முடக்கம் காரணமாக உலகம் முழுவதும் பசுமைக்குடில் வாயுவின் வெளியேற்றம் 7 சதவீதம் அளவிற்கு குறைந்தது. இருப்பினும் அது போதாது என்கிறார்கள் நிபுணர்கள். "பெருந்தொற்று காலத்திலும் நாம் பருவநிலை மாற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. மாறாக அதை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டுதான் இருக்கிறோம் ." இயற்கையாக வெப்பநிலை குறைக்கப்படும் நடவடிக்கைகளைக் காட்டிலும் மனிதர்களின் செயல்பாடுகள் அதி வேகமாக இருப்பதால் வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்த இயலவில்லை. அதே சமயம் தற்போது சர்வதேச வெப்பநிலை காலகட்டத்தின் சராசரி வெப்பநிலையைவிட 1.2 டிகிரி செல்ஷியஸ் உயர்ந்திருப்பது ஒரு கவலை தரும் விஷயமாகக் கருதப்படுகிறது. மேலும் உலக நாடுகள் இந்த நூற்றாண்டில் சர்வதேச வெப்பநிலை அதிகரிப்பை 1.5டிகிரி செல்ஷியஸிற்குள் கட்டுப்படுத்த உறுதியளித்துள்ளன. எனவே நாமும் இயற்கையோடு ஒன்றிணைந்து, வெப்பநிலை குறைக்கப்படும் நடவடிக்கைகளை கையாலுவோம். தட்ட வேப்பநிலை மாற்றம் தரணியில் இனி போராட்டம்...