News Tuesday, February 21, 2017 - 10:07

Select District: 
News Items: 
Description: 
Back to Andaman foot volcano lava - India and South Asia regions, the only one alive, Baron island volcano lava, smoke and lava started to discharge. Andaman and Nicobar islands are the volcano had been dormant for nearly 150 years. Then suddenly last erupted in 1991; The released smoke and lava. Then broke again in the 1994-95 period. It was then the periyaala Flares in the volcano. The outbreak has been recorded since the year 1787. Then, in 1789, 1795, 1803-04, and 1852 years later, the year 1991 recorded a volcanic eruption. Flares occur during the period 2005-07 on the volcano, in 2004 it was found that the impact of the tsunami. Now once again from the volcanic smoke detectors veliyeruvatakak oceanography scientists from Goa. on January 23, published both smoke and lava "
Regional Description: 
மீண்டும் லாவாவை கக்கும் அந்தமான் எரிமலை - இந்தியா மற்றும் தெற்காசியா பகுதிகளில், உயிர்ப்புடன் இருக்கும் ஒரே ஒரு எரிமலையான பாரன் தீவு எரிமலை, புகை மற்றும் லாவாவை வெளியேற்றத் துவங்கியுள்ளது. அந்தமான் நிகோபார் தீவுகளில் இருக்கும் இந்த எரிமலையானது சுமார் 150 வருடங்களாக செயலற்று இருந்தது. பிறகு திடீரென கடந்த 1991-ம் ஆண்டு வெடித்தது; அப்போது புகை மற்றும் எரிமலைக் குழம்புகளை வெளியிட்டது. பிறகு 1994-95 காலகட்டத்தில் மீண்டும் வெடித்தது. அதன்பிறகு இந்த பெரியஅளவில் எரிமலையில் சீற்றங்கள் ஏற்பட்டதில்லை. 1787-ம் ஆண்டுதான் இதன் முதல் வெடிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு 1789, 1795, 1803-04, மற்றும் 1852-ம் ஆண்டுகளுக்குப் பின்பு 1991-ம் ஆண்டுதான் எரிமலை வெடிப்பு பதிவானது. 2005-07 காலகட்டத்திலும் இந்த எரிமலையில் சீற்றங்கள் ஏற்பட்டாலும், அது 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் தாக்கத்தால் ஏற்பட்டது எனக் கண்டறியப்பட்டது. தற்போது மீண்டும் இந்த எரிமலையில் இருந்து புகை வெளியேறுவதாகக் கண்டறிந்துள்ளனர் கோவாவைச் சேர்ந்த கடலியல் விஞ்ஞானிகள். இதுகுறித்துக் கூறிய சி.எஸ்.ஐ.ஆர் மற்றும் தேசிய கடலியல் நிறுவனத்தின் விஞ்ஞானிகள், "இந்தியாவில் உயிருடன் இருக்கும் ஒரே எரிமலையான பாரன் தீவுகள் எரிமலை மீண்டும் வெடித்துள்ளது. இது அந்தமான் தலைநகர் போர்ட்ப்ளேயரில் இருந்து 140 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சுமார் 150 ஆண்டுகளாக வெடிக்காத இது கடந்த 1991-ல் வெடித்தது. கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி, புகை மற்றும் எரிமலைக்குழம்பு இரண்டையும் வெளியிட்டது"