News Tuesday, February 9, 2021 - 10:44

Select District: 
News Items: 
Description: 
தமிழ்நாடுஅரசு மீன்வளத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் 608 பணியிடங்கள்.......
Regional Description: 
தமிழ்நாடுஅரசு மீன்வளத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் 608 பணியிடங்கள் தமிழ்நாட்டில் உள்ள கடலோர மீனவ கிராமங்களில் சாகர் மித்ரா- ஆக ஒரு வருடத்திற்கு முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. பணி : சாகர் மித்ரா, மொத்தப் பணியிடம் : 608 பணிபுரிய வேண்டிய இடம் : தமிழ்நாட்டின் அனைத்து கடலோர மீனவ கிராமங்கள், தேவையான தகுதிகள் : 1. குறைந்தபட்சம் மீன்வளம்/ கடல் வாழ்உயிரியியல் / விலங்கியல் இளங்கலை பட்டப்படிப்பு, 2. தகவல் தொழில் நுட்ப திறன் இருத்தல் அவசியம். தகுதிகள் ஆண்/ பெண் விண்ணப்பதாரர் குறிப்பாக சம்மந்தப்பட்ட கடலோர கிராமத்தில் வசிப்பவராகவோ அல்லது அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவராகவோ இருத்தல் அவசியம். 35 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். தமிழில் நன்கு பேச, எழுத ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். சாகர் மித்ராவின் செயல் திறனுக்காக நிர்ணயிக்கப்பட்ட பணிகளின் அடிப்படையில் மாதாந்திர ஊக்கத் தொகையாக ரூ.10,000/- வழங்கப்படும். இது தவிர அவ்வப்போது கூடுதலாக வழங்கப்படும் பணிகளின் செயல் திறன் அடிப்படையில் ரூ.5000/-வரை கூடுதல் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 19.02.2021 மேலும் விபரங்களுக்கு ; www.fisheries.tn.gov.in