You are here
Disaster Alerts 03/12/2020
State:
Tamil Nadu
Message:
புரெவி புயல் வலுவிழந்துள்ளது
தற்போது பாம்பனுக்கு அருகில் 20 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள புரவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு இடையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . பின்னர் மேலும் வலுவிழந்து அடுத்த 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாறும் .
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது .
பலத்த காற்று எச்சரிக்கை
மோசமான வானிலையுடன் கூடிய சுழல் காற்று மணிக்கு 60-70 கி.மீ அதிகபட்சமாக 80 கி.மீ வேகத்தில் தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிகடல், தென் தமிழக கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும்.
பேரலை எச்சரிக்கை : தென்தமிழ்நாடு :
பேரலைகள் 4.12.2020 இரவு 11.30 மணி வரை 6 முதல் 12 அடி (குளச்சல் முதல் தனுசுகோடி) வரை எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 56 - 64 செ .மீ வேகத்தில் காணப்படும்.
வட தமிழ்நாடு : பேரலைகள் 4.12.2020 இரவு 11.30 மணி வரை 6 முதல் 13 அடி(கோடியக்கரை முதல் பழவேற்காடு)வரை காணப்படும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 56-64 செ .மீ வேகத்தில் காணப்படும்
மீனவர்களுக்கான எச்சரிக்கை
மீன்பிடித்தல் வரும் 4.12.2020 வரை முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும்போது கடல் கரை பகுதிகளில் கடல் பெருக்கம் 1 மீ உயரத்தில் காணப்படும். இதனால் தென் தமிழக கடற்கரை மாவட்டங்களில் தாழ்வான கரையோர பகுதிகளில் குறிப்பாக இராமநாதபுரம் , தூத்தூக்குடி , திருநெல்வேலி மாவட்டங்களில் புயல் கரையை கடக்கும் நேரத்தில் கடல் நீர் உட்புக வாய்ப்புள்ளது
கரையோரங்களில் உள்ள குடிசை பகுதிகள் சேதமடைய வாய்ப்புள்ளது
எனவே மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
Disaster Type:
State id:
2
Disaster Id:
2
Message discription:
புரெவி புயல் வலுவிழந்துள்ளது
தற்போது பாம்பனுக்கு அருகில் 20 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள புரவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது . ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு இடையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . பின்னர் மேலும் வலுவிழந்து அடுத்த 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாறும் .
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது .
பலத்த காற்று எச்சரிக்கை
மோசமான வானிலையுடன் கூடிய சுழல் காற்று மணிக்கு 60-70 கி.மீ அதிகபட்சமாக 80 கி.மீ வேகத்தில் தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிகடல், தென் தமிழக கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும்.
பேரலை எச்சரிக்கை : தென்தமிழ்நாடு :
பேரலைகள் 4.12.2020 இரவு 11.30 மணி வரை 6 முதல் 12 அடி (குளச்சல் முதல் தனுசுகோடி) வரை எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 56 - 64 செ .மீ வேகத்தில் காணப்படும்.
வட தமிழ்நாடு : பேரலைகள் 4.12.2020 இரவு 11.30 மணி வரை 6 முதல் 13 அடி(கோடியக்கரை முதல் பழவேற்காடு)வரை காணப்படும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 56-64 செ .மீ வேகத்தில் காணப்படும்
மீனவர்களுக்கான எச்சரிக்கை
மீன்பிடித்தல் வரும் 4.12.2020 வரை முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும்போது கடல் கரை பகுதிகளில் கடல் பெருக்கம் 1 மீ உயரத்தில் காணப்படும். இதனால் தென் தமிழக கடற்கரை மாவட்டங்களில் தாழ்வான கரையோர பகுதிகளில் குறிப்பாக இராமநாதபுரம் , தூத்தூக்குடி , திருநெல்வேலி மாவட்டங்களில் புயல் கரையை கடக்கும் நேரத்தில் கடல் நீர் உட்புக வாய்ப்புள்ளது
கரையோரங்களில் உள்ள குடிசை பகுதிகள் சேதமடைய வாய்ப்புள்ளது
எனவே மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
Start Date & End Date:
Thursday, December 3, 2020