You are here
Disaster Alerts 01/12/2020
State:
Tamil Nadu
Message:
1.12.2020 - மாலை 6.மணி : தென்மேற்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து திருகோணமலைக்கு 460 கி.மீ தொலைவிலும் , கன்னியாகுமரிக்கு 860 கி.மீ தொலைவில் கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் மையம்கொண்டுள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று புயலாக வலுபெறும். பின்னர் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை திரிகோணமலைக்கு அருகில் நாளை கடந்து பின்னர் மீண்டும் மேற்கு நோக்கி நகர்ந்து குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் வரும் 3 ஆம் தேதிக்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் மேலும் மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் நகர்ந்து தென் தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையில் வரும் 4 ஆம் தேதி அதிகாலையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
பலத்த காற்று எச்சரிக்கை
1.12.2020: மோசமான வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 45-55 கி.மீ அதிகபட்சமாக 65 கி.மீ வேகத்தில் மன்னார் வளைகுடா, குமரிகடல், தென் தமிழக கடற்பகுதிகளில் வீசக்கூடும்
2.12.2020 : மோசமான வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 55-65 கி.மீ அதிகபட்சமாக 75 கி.மீ வேகத்தில் மன்னார் வளைகுடா, குமரிகடல், தென் தமிழக கடற்பகுதிகளில் வீசக்கூடும்
03.12.2020 & 04.12.2020: மோசமான வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 70-80 கி.மீ அதிகபட்சமாக 90 கி.மீ வேகத்தில் மன்னார் வளைகுடா, குமரிகடல், தென் தமிழக கடற்பகுதிகளில் வீசக்கூடும்
பேரலை எச்சரிக்கை : வட தமிழ்நாடு : பேரலைகள் 1.12.2020 மாலை 5.30 மணி முதல் 4.12.2020 இரவு 11.30 மணி வரை 7 முதல் 11 அடி(கோடியக்கரை முதல் பழவேற்காடு)வரை காணப்படும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 95-155 செ .மீ வேகத்தில் காணப்படும்
தென்தமிழ்நாடு : பேரலைகள் 1.12.2020 மாலை 5.30 மணி முதல் 4.12.2020 இரவு 11.30 மணி வரை 7 முதல் 10 அடி(குளச்சல் முதல் தனுசுகோடி) வரை எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 60 - 110 செ .மீ வேகத்தில் காணப்படும்.
மீன்பிடித்தல் வரும் 4.12.2020 வரை முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
Disaster Type:
State id:
2
Disaster Id:
10
Message discription:
1.12.2020 - மாலை 6.மணி : தென்மேற்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து திருகோணமலைக்கு 460 கி.மீ தொலைவிலும் , கன்னியாகுமரிக்கு 860 கி.மீ தொலைவில் கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் மையம்கொண்டுள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று புயலாக வலுபெறும். பின்னர் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை திரிகோணமலைக்கு அருகில் நாளை கடந்து பின்னர் மீண்டும் மேற்கு நோக்கி நகர்ந்து குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் வரும் 3 ஆம் தேதிக்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் மேலும் மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் நகர்ந்து தென் தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையில் வரும் 4 ஆம் தேதி அதிகாலையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
பலத்த காற்று எச்சரிக்கை
1.12.2020: மோசமான வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 45-55 கி.மீ அதிகபட்சமாக 65 கி.மீ வேகத்தில் மன்னார் வளைகுடா, குமரிகடல், தென் தமிழக கடற்பகுதிகளில் வீசக்கூடும்
2.12.2020 : மோசமான வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 55-65 கி.மீ அதிகபட்சமாக 75 கி.மீ வேகத்தில் மன்னார் வளைகுடா, குமரிகடல், தென் தமிழக கடற்பகுதிகளில் வீசக்கூடும்
03.12.2020 & 04.12.2020: மோசமான வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 70-80 கி.மீ அதிகபட்சமாக 90 கி.மீ வேகத்தில் மன்னார் வளைகுடா, குமரிகடல், தென் தமிழக கடற்பகுதிகளில் வீசக்கூடும்
பேரலை எச்சரிக்கை : வட தமிழ்நாடு : பேரலைகள் 1.12.2020 மாலை 5.30 மணி முதல் 4.12.2020 இரவு 11.30 மணி வரை 7 முதல் 11 அடி(கோடியக்கரை முதல் பழவேற்காடு)வரை காணப்படும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 95-155 செ .மீ வேகத்தில் காணப்படும்
தென்தமிழ்நாடு : பேரலைகள் 1.12.2020 மாலை 5.30 மணி முதல் 4.12.2020 இரவு 11.30 மணி வரை 7 முதல் 10 அடி(குளச்சல் முதல் தனுசுகோடி) வரை எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 60 - 110 செ .மீ வேகத்தில் காணப்படும்.
மீன்பிடித்தல் வரும் 4.12.2020 வரை முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
Start Date & End Date:
Tuesday, December 1, 2020 to Friday, December 4, 2020