News Sunday, May 24, 2020 - 21:27
Submitted by nagarcoil on Sun, 2020-05-24 21:27
Select District:
News Items:
Description:
மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு தமிழக அரசு 2015ஆம் ஆண்டு முதல் முதலமைச்சர் சர்மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கி வருகிறது. இந்த விருது ரூ 50,000/- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவை உள்ளடக்கியதாக இருக்கும். 2020 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வருகிற ஆகஸ்ட் 15ம் தேதியன்று நடைபெறும், சுதந்திரதின விழாவில் வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். 1. கடந்த 2019 ஏப்ரல் 1-ஆம் தேதியன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். 2020 மார்ச் 31ம் தேதியன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும். 2.கடந்த நிதி ஆண்டான 2019 மார்ச் 31 முதல் 2020 மார்ச் 31 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். 3.குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல்வேண்டும். 4. விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றி கொண்டிருக்க வேண்டும். 5.மத்திய மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ் விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. 6.விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். 7. விண்ணப்பத்தை www.sdat.tn.gov.in தளம் மூலம் வருகின்ற 30.06.2020 தேதிக்குள், மாலை 4.00 மணிக்குள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
Regional Description:
மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு தமிழக அரசு 2015ஆம் ஆண்டு முதல் முதலமைச்சர் சர்மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கி வருகிறது. இந்த விருது ரூ 50,000/- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவை உள்ளடக்கியதாக இருக்கும். 2020 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வருகிற ஆகஸ்ட் 15ம் தேதியன்று நடைபெறும், சுதந்திரதின விழாவில் வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். 1. கடந்த 2019 ஏப்ரல் 1-ஆம் தேதியன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். 2020 மார்ச் 31ம் தேதியன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும். 2.கடந்த நிதி ஆண்டான 2019 மார்ச் 31 முதல் 2020 மார்ச் 31 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். 3.குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல்வேண்டும். 4. விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றி கொண்டிருக்க வேண்டும். 5.மத்திய மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ் விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. 6.விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். 7. விண்ணப்பத்தை www.sdat.tn.gov.in தளம் மூலம் வருகின்ற 30.06.2020 தேதிக்குள், மாலை 4.00 மணிக்குள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.