News Monday, December 12, 2016 - 10:39

Select District: 
News Items: 
Regional Description: 
புயல் எச்சரிக்கை காலை 10 மணி நிலவரம் வர்தா புயலானது மணிக்கு 13 கி.மீ., வேகத்தில் மேற்கு- தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்னைக்கு கிழக்கே சுமார் 105 கிமீ., துரத்தில் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வலுபெற்று தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்னைக்கும் தென் ஆந்திராவுக்கும் இடையே இன்று மதியம் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் காரணமாக மிதமான மற்றும் கனமழையும் , காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில தென் ஆந்திரா ,தமிழ்நாடு (சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் ) மற்றும் புதுச்சேரி பகுதிகளில்வீசக்கூடும். கடல் அலை மிக சீற்றத்துடன் காணப்படும். கடல் நீரோட்டம் ஒரு செகண்டுக்கு 83-123 cm வேகத்தில் செல்லக்கூடும் . எனவே நாகப்பட்டினம் முதல் திருவள்ளுர் மாவட்டம் வரை உள்ள மீனவர்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்