News Thursday, December 8, 2016 - 14:59

Select District: 
News Items: 
Regional Description: 
வங்கக் கடலின் தென்கிழக்குப் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வடக்கு திசையை நோக்கி நகர்ந்து வர்டாஹ் புயலாக மாறி, விசாகப்பட்டினம் மற்றும் மச்சிலிப்பட்டணம் இடையே சுமார் 1040 கிமீ., துரத்தில் மையம் கொண்டுள்ளது. இந்த புயலானது அடுத்த நான்கு தினங்களுக்குள் வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஆந்திரா கடற்கரை நெல்ல்லூர் மற்றும் காக்கிநாடா கடற்பகுதியில் வரும் 12 ஆம் தேதி கரையை கடக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என கணிக்கப்படுகிறது. மேலும் ஆந்திரா கடற்கரை பகுதியில் பரவலாக மழை பெய்யக்கூடும். எனவே குறிப்பாக வட தமிழ்நாட்டு மீனவர்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுருத்தப்த்தபடுகிரார்கள்.