News Tuesday, November 13, 2018 - 19:54
Submitted by nagapattinam on Tue, 2018-11-13 19:54
Select District:
News Items:
Description:
மேற்கு மத்திய மற்றும் அதையொட்டிய கிழக்கு மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா (Gaja) புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து தெற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் தற்போதய நிலவரப்படி latitude 13.5°N and longitude 86.6°E, சென்னைக்கு 690 கி.மீ கிழக்கு மற்றும் வட கிழக்கு திசையிலும், நாகபட்டிணத்திற்கு 790 கி.மீ கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது . இது அடுத்த 24 மணி நேரத்தில் தென் மேற்கு மற்றும் மேற்கு திசையில் நகர்ந்து கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே வரும் நவம்பர் 15 ஆம் தேதி காலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட தமிழ்நாட்டிற்கான பேரலை எச்சரிக்கை (மாவட்டவாரியாக ) - கடற்கரையிலிருந்து 10 கி.மீ வரை ) சென்னை : 4-6- அடி உயரம், காஞ்சிபுரம், விழுப்புரம் : 4-8 அடி, புதுச்சேரி, கடலூர் : 8-15 அடி, நாகப்பட்டினம். காரைக்கால் : 10-18 அடி, தஞ்சாவூர் : 9-12 அடி, புதுக்கோட்டை : 3-5 அடி உயரத்தில் பேரலைகள் எழ கூடும் என கணிக்கப்படுகிறது. ஆழ்கடல் பகுதியில் பேரலை எச்சரிக்கை : பேரலைகள் 13-18 அடி உயரத்தில் (கடற்கரையிலுருந்து 100-200கி.மீ வரை ) வரும் 13.11.2018 முதல் 14.11.2018 வரை தனுசுகோடி முதல் பழவேற்காடு வரை ஆழ்கடல் பகுதிகளில் எழ கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 70 -80 செ .மீ வேகத்தில் இருக்கும். கடல் பெருக்கம் 1மீ உயரம் வரை இருக்கும். புயல் கரையை கடக்கும் போது நாகப்பட்டினம்,தஞ்சாவூர்,புதுக்கோட்டை , ராமநாதபுரம் மாவட்டங்களில் புயல் கடற்கரையை கடக்கும்போது தாழ்வான கடற்கரை பகுதியில்கடல் நீர் உட்புக வாய்ப்புள்ளது.எனவே மீனவர்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பலத்த காற்று எச்சரிக்கை:
பலத்த காற்று மணிக்கு 70-80- கி.மீ அதிகபட்சமாக 85 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். இது 14ஆம் தேதி மாலை மேலும் அதிகரித்து மணிக்கு 80-90 கி.மீ அதிகபட்சமாக 110 கி.மீ வேகத்தில் வடதமிழ்நாடு, புதுச்சேரி பகுதியில் வீசக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாடு , புதுச்சேரி , தெற்கு ஆந்திர பகுதியில் மீன்பிடிக்க செல்ல முழுவதும் தடைவிதிக்கப்பட்டுள்ளது
Regional Description:
மேற்கு மத்திய மற்றும் அதையொட்டிய கிழக்கு மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா (Gaja) புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து தெற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் தற்போதய நிலவரப்படி latitude 13.5°N and longitude 86.6°E, சென்னைக்கு 690 கி.மீ கிழக்கு மற்றும் வட கிழக்கு திசையிலும், நாகபட்டிணத்திற்கு 790 கி.மீ கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது . இது அடுத்த 24 மணி நேரத்தில் தென் மேற்கு மற்றும் மேற்கு திசையில் நகர்ந்து கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே வரும் நவம்பர் 15 ஆம் தேதி காலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட தமிழ்நாட்டிற்கான பேரலை எச்சரிக்கை (மாவட்டவாரியாக ) - கடற்கரையிலிருந்து 10 கி.மீ வரை ) சென்னை : 4-6- அடி உயரம், காஞ்சிபுரம், விழுப்புரம் : 4-8 அடி, புதுச்சேரி, கடலூர் : 8-15 அடி, நாகப்பட்டினம். காரைக்கால் : 10-18 அடி, தஞ்சாவூர் : 9-12 அடி, புதுக்கோட்டை : 3-5 அடி உயரத்தில் பேரலைகள் எழ கூடும் என கணிக்கப்படுகிறது. ஆழ்கடல் பகுதியில் பேரலை எச்சரிக்கை : பேரலைகள் 13-18 அடி உயரத்தில் (கடற்கரையிலுருந்து 100-200கி.மீ வரை ) வரும் 13.11.2018 முதல் 14.11.2018 வரை தனுசுகோடி முதல் பழவேற்காடு வரை ஆழ்கடல் பகுதிகளில் எழ கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 70 -80 செ .மீ வேகத்தில் இருக்கும். கடல் பெருக்கம் 1மீ உயரம் வரை இருக்கும். புயல் கரையை கடக்கும் போது நாகப்பட்டினம்,தஞ்சாவூர்,புதுக்கோட்டை , ராமநாதபுரம் மாவட்டங்களில் புயல் கடற்கரையை கடக்கும்போது தாழ்வான கடற்கரை பகுதியில்கடல் நீர் உட்புக வாய்ப்புள்ளது.எனவே மீனவர்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பலத்த காற்று எச்சரிக்கை:
பலத்த காற்று மணிக்கு 70-80- கி.மீ அதிகபட்சமாக 85 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். இது 14ஆம் தேதி மாலை மேலும் அதிகரித்து மணிக்கு 80-90 கி.மீ அதிகபட்சமாக 110 கி.மீ வேகத்தில் வடதமிழ்நாடு, புதுச்சேரி பகுதியில் வீசக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாடு , புதுச்சேரி , தெற்கு ஆந்திர பகுதியில் மீன்பிடிக்க செல்ல முழுவதும் தடைவிதிக்கப்பட்டுள்ளது