You are here
Disaster Alerts 10/10/2018
State:
Tamil Nadu
Message:
வட தமிழ்நாடு
நேற்று மேற்கு மத்திய வங்கக்கடலில் உருவாகிய டிடலி புயல் மேலும் வலுப்பெற்று தீவிர புயலாக இன்று (10.10.2018) 5.30 மணிக்கு வடக்கு நோக்கி நகர்ந்து 8.30 மணிவாக்கில் lat 16.5N மற்றும் long 85.8E, கோபால்பூருக்கு 320 கி.மீ தொலைவில் தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையிலும், கலிங்கபட்டினத்திற்கு 270 கி.மீ தொலைவில் தென்கிழக்கு திசையிலிலும் நிலைகொண்டுள்ளது. இது மேலும் தீவிரமடைந்து அதிதீவிர புயலாக அடுத்த 3 மணிநேரத்திற்குள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் காற்றின் வேகம் மணிக்கு 120-130 கி .மீ வேகத்தில் அக்டோபர் 10 மாலை முதல் 11 ஆம் தேதி காலைவரை மேற்கு மத்திய வங்கக்கடலின் ஆழ்கடல் பகுதி மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதியின் ஆழ்கடல் பகுதிகளில் வீசக்கூடும்.
மேலும் வடக்கு ஆந்திரம் மற்றும் ஒடிஷா கடற்கரை பகுதிகளில் மணிக்கு 60-70 கி .மீ வேகத்தில் இன்று மதியத்திலிருந்து காற்று வீசக்கூடும்.இது படிப்படியாக உயர்ந்து மணிக்கு 140-150 கி .மீ வேகத்தில் அதிகரிக்கக்கூடும் . பின்னர் காற்று படிப்படியாக குறைந்து வடக்கு ஆந்திரம் மற்றும் வடக்கு ஒடிஷா பகுதிகளில் மணிக்கு 60-70 கி .மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதிக்கு வருகின்ற 11 தேதிவரையிலும் மீன்பிடிக்க செல்லவேண்டாமென எச்சரிக்கபடுகிறார்கள். மேலும் இந்தப்பகுதிகளில் மீன்பிடிப்பு முழுவதுமாக தடைசெய்யப்பட்டுள்ளது
தென் தமிழ்நாடு
மேற்கு மத்திய அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த லுபான் என்று பெயரிடப்பட்டுள்ள புயலானது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து latitude 14.1N and longitude 59.0E, 610 கி .மீ சாலலாஹ் பகுதிக்கு (ஓமான் )கிழக்கு -தென்கிழக்கு திசையிலும், ஏமன் சோகோட்ரா தீவுக்கு 570 கி .மீ தொலைவில் கிழக்கு -வட கிழக்கு திசையிலும், நகர்ந்து அடுத்த 5 நாட்களில் தெற்கு ஓமான் மற்றும் ஏமன் பகுதிகளில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மேற்கு மத்திய மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 120-130 கி.மீ.வேகத்தில் வீசக்கூடும். இது மேலும் வலுப்பெற்று மணிக்கு 135-145 கி.மீ.வேகத்தில் வரும் அக்டோபர் 11 தேதிகளில் புயல் மையம் கொண்டுள்ள பகுதிகளில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கு மத்திய அரபிக்கடல் ஏடன் வளைகுடா மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு 11 ஆம் தேதி வரை மீன்பிடிக்க செல்லவேண்டாமென எச்சரிக்கப்படுகிறார்கள்.
Disaster Type:
State id:
2
Disaster Id:
2
Message discription:
வட தமிழ்நாடு
நேற்று மேற்கு மத்திய வங்கக்கடலில் உருவாகிய டிடலி புயல் மேலும் வலுப்பெற்று தீவிர புயலாக இன்று (10.10.2018) 5.30 மணிக்கு வடக்கு நோக்கி நகர்ந்து 8.30 மணிவாக்கில் lat 16.5N மற்றும் long 85.8E, கோபால்பூருக்கு 320 கி.மீ தொலைவில் தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையிலும், கலிங்கபட்டினத்திற்கு 270 கி.மீ தொலைவில் தென்கிழக்கு திசையிலிலும் நிலைகொண்டுள்ளது. இது மேலும் தீவிரமடைந்து அதிதீவிர புயலாக அடுத்த 3 மணிநேரத்திற்குள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் காற்றின் வேகம் மணிக்கு 120-130 கி .மீ வேகத்தில் அக்டோபர் 10 மாலை முதல் 11 ஆம் தேதி காலைவரை மேற்கு மத்திய வங்கக்கடலின் ஆழ்கடல் பகுதி மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதியின் ஆழ்கடல் பகுதிகளில் வீசக்கூடும்.
மேலும் வடக்கு ஆந்திரம் மற்றும் ஒடிஷா கடற்கரை பகுதிகளில் மணிக்கு 60-70 கி .மீ வேகத்தில் இன்று மதியத்திலிருந்து காற்று வீசக்கூடும்.இது படிப்படியாக உயர்ந்து மணிக்கு 140-150 கி .மீ வேகத்தில் அதிகரிக்கக்கூடும் . பின்னர் காற்று படிப்படியாக குறைந்து வடக்கு ஆந்திரம் மற்றும் வடக்கு ஒடிஷா பகுதிகளில் மணிக்கு 60-70 கி .மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதிக்கு வருகின்ற 11 தேதிவரையிலும் மீன்பிடிக்க செல்லவேண்டாமென எச்சரிக்கபடுகிறார்கள். மேலும் இந்தப்பகுதிகளில் மீன்பிடிப்பு முழுவதுமாக தடைசெய்யப்பட்டுள்ளது
தென் தமிழ்நாடு
மேற்கு மத்திய அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த லுபான் என்று பெயரிடப்பட்டுள்ள புயலானது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து latitude 14.1N and longitude 59.0E, 610 கி .மீ சாலலாஹ் பகுதிக்கு (ஓமான் )கிழக்கு -தென்கிழக்கு திசையிலும், ஏமன் சோகோட்ரா தீவுக்கு 570 கி .மீ தொலைவில் கிழக்கு -வட கிழக்கு திசையிலும், நகர்ந்து அடுத்த 5 நாட்களில் தெற்கு ஓமான் மற்றும் ஏமன் பகுதிகளில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மேற்கு மத்திய மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 120-130 கி.மீ.வேகத்தில் வீசக்கூடும். இது மேலும் வலுப்பெற்று மணிக்கு 135-145 கி.மீ.வேகத்தில் வரும் அக்டோபர் 11 தேதிகளில் புயல் மையம் கொண்டுள்ள பகுதிகளில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கு மத்திய அரபிக்கடல் ஏடன் வளைகுடா மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு 11 ஆம் தேதி வரை மீன்பிடிக்க செல்லவேண்டாமென எச்சரிக்கப்படுகிறார்கள்.