News Wednesday, November 30, 2016 - 17:18

Select District: 
News Items: 
Regional Description: 
வங்கக் கடலின் தென்கிழக்குப் பகுதியில் நிலை கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் தீவிரமடைந்து “நாடா” புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து, வேதாரண்யம் மற்றும் புதுச்சேரி இடையே டிசம்பர் 2, அன்று கரையை கடக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி , கடலோரப் பகுதிகளில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு, பரவலாக மழை பெய்யக்கூடும். காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 45 -55 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். அலையின் உயரம் 06 முதல் 08 அடி வரை காணப்படலாம். எனவே மீனவர்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.