News Saturday, March 31, 2018 - 10:40
Submitted by nagapattinam on Sat, 2018-03-31 10:40
Select District:
News Items:
Description:
மரங்களை கடலில் வைத்து மீன்பிடிக்கும் முறை - பசுமையான மிகவும் பெரிய மரங்களை வெட்டி எடுத்து சென்று படகின் உதவியோடு கடலின் மையப்பகுதியில் இந்த மரத்தை தண்ணீரில் மூழ்கி இருக்குமாறு அந்த மரத்தின் அடிப்பகுதியிலும் பக்கவாட்டிலும் பெரிய கற்களை கட்டி கடலில் மூழ்குமாறு செய்வோம். கடலில் மூழ்கியுள்ள மரம் கடலின் சீற்றத்தால் நாளடைவில் அந்தமரம் மக்கியும் அந்த மரத்தின் கிளையின் பகுதியில் கடல்பாசி படிந்தும் மரம் ஒரு வகையான துர்நாற்றம் ஏற்படும். இதனால் அப்பகுதியில் உள்ள மீன்கள் அந்த மரத்தில் வந்து சேரும் மீன்களுக்கு தேவையான உணவுகள் அம்மரத்தில் கிடைக்கும். அப்பகுதியில் உள்ள மீன்கள் தங்கி, வாழத் தொடங்கும். அவ்வகையான மீன்கள் தங்குமீன்களாகும். இவ்வகையான மீன்கள் அம்மரக்கிளையில் முட்டையிட்டு குஞ்சு பொறித்தும் அவற்றையே அண்டி (நாடி) மீன்கள் தங்கிவிடும். நாங்கள் அம்மீன்களை எளிய முறையில் பிடிப்போம்.
Regional Description:
மரங்களை கடலில் வைத்து மீன்பிடிக்கும் முறை - பசுமையான மிகவும் பெரிய மரங்களை வெட்டி எடுத்து சென்று படகின் உதவியோடு கடலின் மையப்பகுதியில் இந்த மரத்தை தண்ணீரில் மூழ்கி இருக்குமாறு அந்த மரத்தின் அடிப்பகுதியிலும் பக்கவாட்டிலும் பெரிய கற்களை கட்டி கடலில் மூழ்குமாறு செய்வோம். கடலில் மூழ்கியுள்ள மரம் கடலின் சீற்றத்தால் நாளடைவில் அந்தமரம் மக்கியும் அந்த மரத்தின் கிளையின் பகுதியில் கடல்பாசி படிந்தும் மரம் ஒரு வகையான துர்நாற்றம் ஏற்படும். இதனால் அப்பகுதியில் உள்ள மீன்கள் அந்த மரத்தில் வந்து சேரும் மீன்களுக்கு தேவையான உணவுகள் அம்மரத்தில் கிடைக்கும். அப்பகுதியில் உள்ள மீன்கள் தங்கி, வாழத் தொடங்கும். அவ்வகையான மீன்கள் தங்குமீன்களாகும். இவ்வகையான மீன்கள் அம்மரக்கிளையில் முட்டையிட்டு குஞ்சு பொறித்தும் அவற்றையே அண்டி (நாடி) மீன்கள் தங்கிவிடும். நாங்கள் அம்மீன்களை எளிய முறையில் பிடிப்போம்.